பதிவுகளின் வாயிலாக!

Saturday, March 07, 2009




சமாதிகளில் நாங்கள்
சாவகாசமாக
ஓய்வெடுகிறோம்தான்!

ஆனாலும்
எங்களின் ஆயுளில்
நிறைவேறாத
அல்ப ஆசைகள்
எங்களுக்குள்
எகத்தாளமிட்டுக்
கொண்டுதானிருக்கின்றன!

என்ன செய்வது?
செத்த பின்னும்
சிவனே என்று
நிம்மதியாய்
இருக்க முடிவதில்லை
எங்களால்!

ஆசைகளை
அறவே ஒழிக்க
அனுபவித்துத் தீர்
என்பதுதான்
எங்களுக்குத்
தெரிந்த ஒரே வழி!

அதனால்தான்
அவ்வப்போது
எட்டிப் பார்க்கிறோம்!
எங்கள் பதிவுகளின்
வாயிலாக!



ரீ எண்ட்ரி! வந்துட்டம்ல

Friday, March 06, 2009

முதல்ல பதிவு போட்டு எங்களை எழுப்பி(உசுப்பி) விட்ட லோஷன் மற்றும் நசரேயன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொல்கிறோம்!

ஆவி என்று ஆனந்தவிகடனைப் பற்றி எழுதினாலும் "எங்களைத்தான் கூப்பிடுறாங்களோன்னு நினைச்சி எங்களை எழுந்திருக்க வெச்ச அபி அப்பாவுக்கும் ஒரு ஸ்பெசல் நன்னி!

மேலும் இத்தினி நாளா எங்களை எவ்விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணாம தூங்க அனுமதிச்ச எங்கள் பாசமிகு தமிழ் வலைப் பதிவர் சகோதர/சகோதரிகளுக்கும் எங்கள் நன்றி!

இப்போதைக்கு இம்புட்டுதேன்! அப்புறமா ஒவ்வொரு ஜாலமா எடுத்து வுடுறோம்! இப்ப ஜூட் விட்டுக்குறோம்பா!

தூக்கமா வருது! ஒரு நல்ல மரமா போயி இடம் பிடிச்சி ஹாயாத் தொங்கணும் ச்சே ஹாயா தூங்கணும்!

வர்ட்ட்ட்ட்ட்ட்டா!

செருப்பை மாட்டுவது எப்படி?

Thursday, June 07, 2007


1. செருப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
2.ஒரு ஜோடி செருப்புகள் உள்ளனவா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.
3. வலது கால் செருப்பை வலது காலிற்கு நேராக வைக்கவும்.
4.இடது கால் செருப்பை இடது காலிற்கு நேராக வைக்கவும்.
5.இடது, வலது கால் செருப்புகளை முறையே சரியாக வைத்திருக்கிறோமா என்று சரி பார்க்கவும்.
6. இடது காலை மெதுவே உயர்த்தி வலது காலால் நின்றவாறே இடது கால் செருப்பின் மீது இடது காலை வைக்கவும்.
7.இடது காலைத்தான் இடது கால் செருப்பின் மீது வைத்திருக்கிறோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
8.இப்பொழுது இடது காலை இடது கால் செருப்பினுள் மெதுவாக நுழைக்கவும்.
9. வலது காலை மெதுவே உயர்த்தி இடது காலால் நின்றவாறே வலது கால் செருப்பின் மீது வலது காலை வைக்கவும்.
10.வலது காலைத்தான் வலது கால் செருப்பின் மீது வைத்திருக்கிறோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.
11.இப்பொழுது வலது காலை வலது கால் செருப்பினுள் மெதுவாக நுழைக்கவும்.
அவ்வளவுதான் செருப்பு போட்டாயிற்று.
எச்சரிக்கை :
மண்டபத்தில் செருப்பிற்கு உரியவர் வந்து காலும் செருப்புமாக பிடிக்கும் முன்னர் மண்டபத்தை விட்டு ஜூட் விட்டு விடவும்.

அவந்தியக்காவுக்காக இந்த அழகுப் பதிவு

Saturday, April 07, 2007

அழகுத் தொடர்ல அடுத்ததா யாரை அழைக்கலாம்னு நம்ம அவந்தியக்கா குழம்பிப் போய் இருக்காங்க! யாராச்சும் விசனப் பட்டா நம்ம மனசு தாங்காது.


பெண் என்றால் பேயும் இறங்கும் அல்லவா? அதான் அவங்க அழைக்கும் முன்பாகவே அவங்க அழைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த அழைப்பையும் ஏற்றுக் கொண்டு இந்த அழகுப் பதிவை இடுகிறேன்.





1. அழகுன்னாலே எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது இயற்கைதான். அழகான ஓடையும் அதன் இரு கரைகளிலும் பூச்சொரியும் மரங்களும், மெதுவாய் சலசலத்து ஓடும் ஓடை நீரும், நினைச்சுப் பார்க்கும்போதே அழகா இருக்கும். அங்கே போய்ட்டா நேரம் காலமே தெரியாது. அப்படியே அங்கே இருக்குற மரங்களில் தொங்கிகிட்டே ஒரு தூக்கம் போட்டா...!




2. அடுத்ததா ஒற்றையா நிற்கும் மரங்கள் எல்லாமே எங்களுக்கு அழகுதான். ஒத்தையா நிக்குற மரம் அதுவும் புளிய மரம்னா சொல்லவே வேணாம். டகால்னு மேல ஏறி துண்டைப் போட்டு இடம் பிடிச்சிக்குவோம்.


3.மரங்கள் அடர்ந்த தோப்பு கொள்ளை அழகு. அதுவும் பெரிய காடா இருந்தா ரொம்ப வசதி. அப்பத்தான இராத்திரி நேரத்துல வெள்ளை சேலை கட்டிகிட்டு ஹாயா ஒரு பாட்டை ஹம்மிங்க் செஞ்சிகிட்டே அப்படியே காத்தாட வாக்கிங்க் போக முடியும். எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது.


4.பேய்களுக்கு மிகவும் பிடிச்ச இன்னொரு விஷயம் சூரிய அஸ்தமனம். அதாங்க சன் ஸெட்டு. எப்படா பகல் முடிஞ்சி ராப்பொழுது தொடங்கும்னு இருக்கும். சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சி இருள் கவ்வும் நேரம் இருக்கு பாருங்க. பார்க்க பார்க்க அப்படியே மனசுக்குள்ளே பரவசம் பொங்கும்.


5.எங்கியாவது ஊருக்கு ஒதுக்குப் புறமா இந்த மாதிரி பாழடைஞ்ச பழைய வீடு, பங்களா இருந்தா எங்களுக்குக் கொண்டாட்டம்தான். அதைத்தான் நாங்க கனவு இல்லமா கனவு கண்டுகிட்டு இருப்போம். வாடகை இல்லை. பேங்க் லோன் பிரச்சினை இல்லை. பார்த்த மாத்திரத்துல பால் காய்ச்சாமலேயே குடி புகுந்துட வேண்டியதுதான். ரொம்ப வசதியா இருக்கும். இந்த மாதிரி வீடுகளில் நாங்க கார் பார்க்கிங் வசதியெல்லாம் இருக்கான்னு பார்ப்பதில்லை.
முதல்ல எல்லாம் நாவல்களில் நீலாங்கரை பங்களா பத்தி எழுதுவாங்க. இப்ப அங்கெல்லாம் நாங்க போகக் கூட முடியலை. ஜனத்தொகை ஜாஸ்தி ஆகி இப்ப அங்கயும் மக்கள் ஆக்கிரமிச்சிட்டாங்க. :(




அடுத்ததா வேற யாரை கூப்பிடலாம்.
நமக்குத்தான் இருக்கவே இருக்காரே நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு....
வேற யாரு,,?
அப்புறமா எங்க பிளாக்ல பிரச்சினை ஆனப்பெல்லாம் இலவச ஆலோசனைகள் தந்து பிளாக் நல்லா வர வெச்ச எங்க பொன்ஸ் அக்கா...
ஜொள்ளு விடாத பசங்களைக் கூட கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஜொள்ளு விட வைக்குற எங்க பாசமிகு அண்ணன் ஜொள்ளுப் பாண்டி...

ஆகியோரை அழகு ன்னா என்னன்னு டெபனிஷன் குடுத்து பதிவு போடுமாறு பணிவன்போட கேட்டுக்குறேங்கோவ்.


எங்க ஊரு எழுத்தாளர்

தமிழ்ப் பதிவுலகத்துல எங்களைப் பத்தி எழுதுறவங்க ரொம்ப குறைவுன்னு கவலைப் பட்டுகிட்டு இருந்தோம். அந்தக் குறையைப் போக்கும் விதமாக இப்போ அண்ணன் வினையூக்கி அவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு கதையா எழுதித் தள்ளுறார்.

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொல்கிறோம்.
அவரது கதைகளுக்கான சுட்டிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.


மூன்று வரியில் ஒரு கதை

அரை நிமிடக் கதை

இன்னொரு அரை நிமிடக் கதை

விரைவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து

அண்ணன் வினையூக்கி அவர்களுக்கு பதிவுலக பி.டி.சாமி என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்க இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொல்கிறோம்.

உலகக் கோப்பை கிரிக்கெட்- கணிப்புகள்

Tuesday, March 13, 2007



உலகக் கோப்பை 2007 - கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் நாடுகளுக்கிடையேயான வெற்றி தோல்விகள் பற்றிய ஆவியுகல கணிப்புகள்.

1. உலகக் கோப்பை 2007 யை வெல்ல பிரகாசனமான வாய்ப்புகள் உள்ள அணிகள் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்.

2. இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்குச் செல்வதே சந்தேகம்.

3. இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிச் சுற்றுவரை அழைத்துச் செல்லும் வீரர்களாக பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.
கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங்.

சச்சின் ஓரிரு அரை சதம்/சதங்களைப் பூர்த்தி செய்தாலும் எல்லா ஆட்டங்களிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது சந்தேகமே!

4. குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது குறைந்த பட்சம் 5 முதல் 10 ஓவர்கள் மழையால் பாதிக்கப் படும்.

5. இந்திய அணி முக்கியமான விளையாட்டு ஒன்றை டக்ளஸ்வெர்த் முறையின் மூலம் இழக்க நேரிடும். அதுவே அடுத்த சுற்றிற்கு செல்வதில் இருந்து முற்றுப் புள்ளி வைக்கக் கூடும்.

(முழுக்க முழுக்கக் கற்பனையே...! டென்ஷன் ஆனவர்கள் உடனடியாக தங்களது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளவும்)

காணாமல் போன ரகசியம்

Saturday, February 03, 2007

யாரோ ஒரு பாவிப்பய கட்டி வெச்ச தாயத்துல ரெண்டு மாசமா வெளிய வரவே முடியாம போச்சு! இதனால் பயம் விட்டுப் போன பெனாத்தலார் அவர் கனவுல கூட எங்க ஊர்க்காரங்க வரலைன்னு தனியா பதிவு போட்டு சொல்றார்.

தமிழ் மணத்துல என்ன நடக்குது இப்போ? லொடுக்கு அண்ணாச்சி என்ன ஆனார்? இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஒரு நாள் தொடர்ல ஜெயிச்சதுல அண்ணன் காலரைத் தூக்கி விட்டுகிட்டு அலம்பல் பண்னிகிட்டி இருப்பாருன்னு நினனக்கிறேன்!

மக்களே வேற ஏதாவது விசேஷமான கொலை வெறித் தகவல்கள், சண்டை சச்சரவுகள் ஏதாவது நடந்ததா? போரடிக்காம போயிட்டிருக்கா?

அந்த தாயத்தைக் கட்டி எங்களுக்கே சூனியம் வெச்ச ஆளு மட்டும் கைல அகப்படட்டும். சூப்பு, பிரியாணி, 65ன்னு போட்டு கொண்டாடிப்புடுறோம்.

எங்க சொந்தக் காரங்க நடிச்ச படம்!

Wednesday, January 31, 2007



















Story: Lam Ching Ying returns to kick some vampire ass, this time in 1987 Hong Kong. A professor leading an archaeological dig uncovers a family of three vampires, and the only thing on the professor’s mind is profit. Lam Ching Ying knows that the vamps need to be exorcised, and a tug of war between the two develops over the corpses. The child vampire, ‘OK Boy’ escapes, and is found by two children, who believe him to be an illegal immigrant from mainland China.

Review: Mr Vampire was a classic, destined to reincarnate again and again, but this atrocious sequel nearly cast the series into the abyss forever. Set in the 80’s, the film lacks the fantasy elements of the original, and changes so many key elements that it barely even feels like a Mr Vampire movie.

Lam Ching Ying is the star, naturally, but neither his actual physical abilities nor his character’s usual magic bag of tricks are used to good effect. The absence of Ricky Hui and Chin Siu Ho is a dissapointment, so the decision to compensate with Yuen Biao is baffling considering that Yuen is capable of so much, yet here he does so little. Even his main action scene turns out to be an initially funny spoof of slow motion fight scenes, which overstays it’s welcome for far too long. Moon Lee returns from the original, but as usual, she does nothing but look cute.

The most obvious problem here is the budget, which is too small to compete with the original movie. The 80’s backdrop is blatantly a money saving exercise to begin with, but then other problems begin to show. The make-up is poor, swapping decomposing vampire flesh for white face paint, and there are barely any special effects. There are none of the imaginative ghouls, ghosts and goblins present in the other Mr Vampire movies, just vampires. The usual juggling of chickens, dog’s blood and magic string is missing from this movie, and a lot of the action often takes place in what looks like a house owned by one of the production crew.

With a cinematic culture as wildly imaginative as Hong Kong’s, even the worst films often still contain a number of great ideas that could have been so much more, and Mr Vampire 2 is no different. The introduction of a child vampire could have been extremely creepy, but instead we are forced to sit through an embarrassing subplot ripped straight out of ET, as a bunch of fat Chinese kids befriend the ‘cute’ undead ankle-biter. They take him out to play in the park, and name him ‘OK Boy’ when they should have named him ‘plot padding’ and burned the little bastard at the stake. Later in the film, two vampires go on the rampage in a busy Hong Kong street, but again, a good idea is not explored in an entertaining way.

The vampires here just fail to scare. In the other films, they present a real danger, and the comedy being played out by the living as they avoid the growling, snarling decomposers is what makes it work so well. What we get instead are female vampires that blow kisses, montages of ‘OK Boy’ dressed up in shades and a headscarf, and the realisation that vampires love their families as much as you and I. Truly horrific.

So, the story sucks, the vampires are misunderstood rather than scary, and this film should never have been made. It’s a good job that by the third installment in the series, everything turned out just fine.

ஹி ஹி, விஜய் டிவில தமிழில் பார்த்தேன். ரொம்ப நல்லா (காமெடியா) இருந்தது.
விமர்சனத்தை படிச்சிபோட்டு பிடிச்சிருந்தா நீங்களும் போயி பாருங்க!