பதிவுகளின் வாயிலாக!

Saturday, March 07, 2009




சமாதிகளில் நாங்கள்
சாவகாசமாக
ஓய்வெடுகிறோம்தான்!

ஆனாலும்
எங்களின் ஆயுளில்
நிறைவேறாத
அல்ப ஆசைகள்
எங்களுக்குள்
எகத்தாளமிட்டுக்
கொண்டுதானிருக்கின்றன!

என்ன செய்வது?
செத்த பின்னும்
சிவனே என்று
நிம்மதியாய்
இருக்க முடிவதில்லை
எங்களால்!

ஆசைகளை
அறவே ஒழிக்க
அனுபவித்துத் தீர்
என்பதுதான்
எங்களுக்குத்
தெரிந்த ஒரே வழி!

அதனால்தான்
அவ்வப்போது
எட்டிப் பார்க்கிறோம்!
எங்கள் பதிவுகளின்
வாயிலாக!



ரீ எண்ட்ரி! வந்துட்டம்ல

Friday, March 06, 2009

முதல்ல பதிவு போட்டு எங்களை எழுப்பி(உசுப்பி) விட்ட லோஷன் மற்றும் நசரேயன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொல்கிறோம்!

ஆவி என்று ஆனந்தவிகடனைப் பற்றி எழுதினாலும் "எங்களைத்தான் கூப்பிடுறாங்களோன்னு நினைச்சி எங்களை எழுந்திருக்க வெச்ச அபி அப்பாவுக்கும் ஒரு ஸ்பெசல் நன்னி!

மேலும் இத்தினி நாளா எங்களை எவ்விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணாம தூங்க அனுமதிச்ச எங்கள் பாசமிகு தமிழ் வலைப் பதிவர் சகோதர/சகோதரிகளுக்கும் எங்கள் நன்றி!

இப்போதைக்கு இம்புட்டுதேன்! அப்புறமா ஒவ்வொரு ஜாலமா எடுத்து வுடுறோம்! இப்ப ஜூட் விட்டுக்குறோம்பா!

தூக்கமா வருது! ஒரு நல்ல மரமா போயி இடம் பிடிச்சி ஹாயாத் தொங்கணும் ச்சே ஹாயா தூங்கணும்!

வர்ட்ட்ட்ட்ட்ட்டா!