வெள்ளிக்குப் பிறகு சனிதான!

Monday, September 25, 2006

வெள்ளிக்கிழமை போன அப்புறம் வேறென்ன?
சனிக்கிழமைதான!

சனிக்கிழமைக்குப் பொறவு ஞாயிறுதேன்.

ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம்
திங்கள் கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்குப் போனான்
புதன் கிழமை புத்தி வந்தது
வியாழக் கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கிழமை வீட்டுக்குப் போனான்.
சனிக் கிழமை சாப்பிட்டுப் படுத்தான்.

ஞாயிற்றுக் கிழமை மறுபடியும் நகையைக் காணோம்....

21 comments:

Anonymous said...

சனிப் பொணம் தனிப்போகாதுன்னுவாங்க..

அடப்பாவி, அவளா நீ? அதான் எங்களை எல்லாரையும் படுத்திகிட்டிருக்கியா?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அடியாத்தீ.. நீயுமா?

லொடுக்கு said...

கிழமைகளை தமிழில் கூறவும். இல்லாட்டி கருப்பு அண்ணன் கோவிச்சுகுவாரு.

ராதாராகவன் said...

எல்லாம் ஒரு முடிவோடதான் கிளம்புனீங்களா?

ராதாராகவன் said...

ஒரு முடிவோடதான் கிளம்புனீங்களா?

லொடுக்கு said...

புதன் --> அறிவன்
சனி --> காரி

மற்றவை எல்லாம் சரியே.

:)

கார்மேகராஜா said...

ஞாபகம் வருதே! நான் சின்ன வயதில் கற்றது.

sivagnanamji(#16342789) said...

ஆவிகள் உலகமே

அழ.வள்ளியப்பாவின் இக்கவிதையில்
கடைசி வரியை விட்டுட்டீங்களே:

"அப்புறம் அவன் கதை யாருக்குத்தெரியும்?"

ஆவி அம்மணி said...

//"அப்புறம் அவன் கதை யாருக்குத்தெரியும்?" //

அதுதான் கடைசி வரியில் சொல்லி இருக்கிறேனே சிவஞானம்ஜி!

ஞாயிற்றுக் கிழமை மறுபடியும் நகையைக் காணோம்....

ஆவி அம்மணி said...

//அடியாத்தீ.. நீயுமா?//

ஆமாம் பாலபாரதி! நானுமேதான்.

ஆரம்பிச்சது நீங்கதானே?

நிர்மல் said...

என்ன ஒரு தத்துவம்!
என்ன ஒரு தத்துவம்!!

இப்படி ஒரு தத்துவத்தை இது வரை நான் பார்த்ததே இல்லை.

Anonymous said...

nice!very nice!hi! anil kutty......

Anonymous said...

hi anil kutty, can you change the picture;this won't suit for you.

ஆவி அம்மணி said...

//சனிப் பொணம் தனிப்போகாதுன்னுவாங்க//

நான் சனிப்பொணம் அல்ல!

சனி ஆவி!
நீங்களும் உடன் வருகிறீர்களா அனானி அண்ணா?

ஆவி அம்மணி said...

//கிழமைகளை தமிழில் கூறவும். இல்லாட்டி கருப்பு அண்ணன் கோவிச்சுகுவாரு.
//

பதிவு போட்டதே நகைச்சுவைக்காகத்தான்! இதுல அவரு எதுக்கு கோவிச்சிக்கப்போறாரு!

(அவரும் நம்ம ரசிகர்தான்)

ஆவி அம்மணி said...

//எல்லாம் ஒரு முடிவோடதான் கிளம்புனீங்களா? //

ராதாராகவன் அண்ணா!

ஆமாம், எல்லாரும் ஒரு குரூப்பாய்த்தான் கெளம்பி இருக்கோம்!

ஆவி அம்மணி said...

//மற்றவை எல்லாம் சரியே//

நன்றி லொடுக்கு பாண்டி அண்ணா!

அடுத்த கிரிக்கெட் மேட்ச் எங்கே? யாரோட?

ஆவி அம்மணி said...

//ஞாபகம் வருதே! நான் சின்ன வயதில் கற்றது.
//

நானும் சிறு வயசில் படிச்சதுதான்.
:-)

மலரும் நினைவுகளா?

ஆவி அம்மணி said...

//என்ன ஒரு தத்துவம்!
என்ன ஒரு தத்துவம்!!

இப்படி ஒரு தத்துவத்தை இது வரை நான் பார்த்ததே இல்லை.
//

நிர்மல் அண்ணா?

நீங்க யாரு? புதுசா இருக்கே?

எனிவே எங்க ஊர்ப்பக்கம் வந்ததுக்கு நன்றி!

ஆவி அம்மணி said...

//hi anil kutty, can you change the picture;this won't suit for you. //

அனானி அண்ணா!
நான் அணில் குட்டியெல்லாம் இல்லை.

ஆவிக் குட்டி!
(ஆவி அம்மணியாக்கும்)

யோசிப்பவர் said...

//ஞாயிற்றுக் கிழமை மறுபடியும் நகையைக் காணோம்....
//

;)))