தடாலடியாருக்கு - நினைவூட்டல்!

Wednesday, September 27, 2006

Photobucket - Video and Image Hosting

கடந்த தடாலடி போட்டி அறிவித்து பின்னர் வெகுநாட்களாகியும் அடுத்த தடாலடி போட்டி ஏதும் அறிவிக்காமல் மௌனம் காக்கும் கௌதம் அவர்களுக்கு நினனவூட்டவும், மெத்தனப் போக்கைக் கண்டிக்கவும் எச்சரிக்கை செய்யவும் இந்த முறை தடாலடி போட்டியை நானே அறிவிக்கிறேன்.

எங்கே மேற்கண்ட படத்திற்கேற்றவாறு கமெண்டுகளை அள்ளி விடுங்கள் பார்க்கலாம்.

பரிசு: வழக்கம்போல கௌதம் அவர்களால் வழங்கப்படும் என்று தன்னடக்கத்தோடு தெரிவித்துக் கொல்கிறேன்.

அனானி அண்ணாச்சிகளும் இதில் பங்கேற்கலாம்.

24 comments:

ஆவி அம்மணி said...

உதாரணத்திற்கு நானே ஒன்றை ஆரம்பித்து வைக்கிறேன்.

"செத்தாலும் கேட்குதோ ஒரு சொகுசு வாழ்க்கை...!?"

லொடுக்கு said...

மூலிகை வைத்தியம் செய்ய கட்டில் ரெடி. ஆவியும் ரெடி.

siva gnanamji(#18100882083107547329) said...

கட்டிலுக்கு கால் இல்லையே, கவணிச்சீங்களா?


பரிசை என்சார்பில் நீங்களே வாங்கி
அனுப்பவும்

dondu(#11168674346665545885) said...

எல்லோரும் கட்டேலத்தான் போனாங்க, நான் மட்டும் மெத்தேலே போனேனாக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சும்மா அதிருதுல said...

ராத்திரில தான் ஆவி வாக்கிங் போகும்
இப்ப பகல் பொழுதும் போக ஆராம்பிச்சிட்டா...

சும்மா அதிருதுல said...

ஆமா பரிசு என்னா குட்டி சாத்தான் படத்துக்கு டிக்கட்டா..

நாமக்கல் சிபி said...

//கட்டிலுக்கு கால் இல்லையே, கவணிச்சீங்களா?
//

ஆவிகளுக்குத்தான் கால் இல்லை
அட(ப்ப்) ஆவிங்களா!
கட்டிலுக்குமா கால் இல்லை?

Syam said...

வீட்டு கட்டில்ல படுத்தா காத்தடிக்கும்...
இந்த கட்டில்ல படுத்தா ஆவி அடிக்கும்...

Syam said...

வீட்டு கட்டில்ல படுத்தா காத்தடிக்கும்...
இந்த கட்டில்ல படுத்தா ஆவி அடிக்கும்...

மஞ்சூர் ராசா said...

அட சுடுகாட்டில் ஒரே புழுக்கமா இருக்குன்னு வெறும்காட்டில் படுக்கலாம்னா வுட மாட்டேங்கறீங்களெ

மஞ்சூர் ராசா said...

காலங்காத்தாலெ ஆவியா வந்து ஏண்டா இப்படி தொல்லை தர்றே?

நாமக்கல் சிபி said...

செத்தாலும் சௌக்கியமுண்டாகட்டும்னு யாராவது வாழ்த்திட்டாங்களோ???

Anonymous said...

கட்டையிலே போனபின்பும் கட்டில் மெத்தை கேட்குதோ!

வலைஞன் said...

ஆகி வந்த கட்டில் மாதிரி இது
ஆவி வந்த கட்டில்.

வலைஞன் said...

மீளா நித்திரைக்கும் மெத்தைக்கட்டில்
மீளும் நினைவுகளின் மீட்டல்?

வலைஞன் said...

சுட்டபின்பும் வேகாத ஆசை
சொகுசு போதாத ஆவி...

Anonymous said...

//ஆவிகளுக்குத்தான் கால் இல்லை
அட(ப்ப்) ஆவிங்களா!
கட்டிலுக்குமா கால் இல்லை?//

நல்லா பாருய்யா அங்க கட்டிலே இல்ல....


அமானுகுரு ஆவி

Anonymous said...

மெத்தையோட கட்டில் இருக்கு
சட்டத்தோட சன்னல் இருக்கு
ஆனா நீ என்னோட இல்லாததால
ஆவியா என்னுசுரு போல
எல்லாமே தப்பான எடத்தில் இருக்கு

G Gowtham said...

ஆஹா! ரெண்டு நாள் ஊர்ல இல்ல, அதுக்குள்ளார கெளம்பீட்டான்ங்கய்யா! கெளப்பீட்டாய்ன்ங்க!
//பரிசு: வழக்கம்போல கௌதம் அவர்களால் வழங்கப்படும் என்று தன்னடக்கத்தோடு தெரிவித்துக் கொல்கிறேன்.//
இதோ பரிசை அறிவிக்கிறேன்..
கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் தனி ஆளாக உட்கார்ந்து புதுப்பேட்டை படத்தைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு!!!!

என்ன ஆவியாரே ஓ,கே.யா?

ஆவி அம்மணி said...

//கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் தனி ஆளாக உட்கார்ந்து புதுப்பேட்டை படத்தைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு!!!!
//

ஆஹா! பரிசு பெறுபவருக்கு படம் காட்டும் வாய்ப்பில் அப்படியே எங்க ஏரியா வாசிகளும் படத்தைக் கண்டு களிக்க ஏற்பாடு செய்த கௌதம் அவர்களுக்கு நன்றி!

RBGR said...

அய்யோன்னு ஒரு கட்டில்க்கதை

ஆவி அம்மணி said...

சின்னப்புள்ளை

ரொம்ப சின்னப்புள்ளையா இருக்கீங்க!
நம்ம படத்தைப் பார்த்து பயந்துடப் போறீங்க!?

SP.VR. SUBBIAH said...

என் வகுப்புக் கண்மணிகள் எல்லாம் பயந்த சுபாவம் உடையவர்கள்

பரிசை நம்பி ஏமாந்து உள்ளே வந்தால் திருப்பி அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்!
வாத்தியார்

Santhosh said...

தடாலடியாருக்கு இப்படி நினைவூட்டினா வேலைக்கு ஆகாது ராத்திரி அவரு தூங்குனதுக்கு அப்புறம் இங்க இருக்குற கட்டிலில் கொண்டு வந்து போட்டு முயற்சி செய்யுங்க மறக்கமுடியாது அவரால்.